Saturday, June 12, 2010

நெஞ்சு பொறுக்குதில்லையே!


மக்களின் அடிப்படை வாழ்க்கையோடு எந்தவித சம்பந்தமும் இல்லாத மெகா சீரியல்கள், மாயாஜால பேய்க்கதைகள், நிஜம் என்ற பெயரில் அவிழ்த்து விடப்படும் பொய்கள், நடிக,நடிகைகளின் அருவெறுக்கத்தக்க நடனங்கள் என்று ‘மக்களின் ரசனை’ என்ற போர்வையில் இன்றைய காட்சி ஊடகங்கள் கல்லாப்பெட்டியை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. அதற்கு விதிவிலக்காக, சமூகப் பொறுப்புணர்வுடனும் ஊடகங்கள் செயல்பட முடியும் என்பதற்குச் சான்றாக உள்ள, விரல்விட்டு எண்ணக்கூடிய சில நிகழ்ச்சிகளில் விஜய் தொலைக்காட்சியின் நீயா... நானா? நிகழ்ச்சியும் ஒன்று.